நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, August 12, 2018

சமூக வலைத்தளங்கள் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் சாதனம் அல்ல



அரசாங்க அலுவலகங்களினதும், அரச உத்தியோகத்தர்களினதும் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் சாதனங்களாக குறுஞ்செய்தி (SMS), தொலைமடல் (Fax), ஈமெய்ல் (Email), ரெலிமெய்ல்(Telemail), தொலைபேசி என்பவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் இவற்றை மாத்திரமே அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும் பொது நிருவாக அமைச்சு அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ தொலைத் தொடர்பாடல் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல் ஒன்று குறித்து பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரியொருவர் விளக்கமளிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப் என்பன உத்தியோகபூர்வ தொலைத் தொடர்பாடல் சாதனங்களாக கொள்ளப்பட மாட்டாது எனவும், இவற்றை உத்தியோகபூர்வ தொடர்பாடல் சாதனங்களாக கருதி நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரச ஊழியர் ஒருவர் திடீர் விடுமுறைகளை தமது காரியாலயத்துக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job