நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, May 29, 2024

லண்டனிலிருந்து யாழ் வந்த கிருசாந்தி தாயின் பல்லை அடித்து உடைத்தாள் !! அண்ணணுக்கு சொத்து எழுதியதால் ஆவேசம்!!


லண்டனிலிருந்து யாழ் வந்த கிருசாந்தி தாயின் பல்லை அடித்து உடைத்தாள் !! அண்ணணுக்கு சொத்து எழுதியதால் ஆவேசம்!!

லண்டனிலிருந்து சாவகச்சேரி வந்த 34 வயதான கிருசாந்தி தனது தாயின் பல்லை அடித்துடைத்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரே தனது மகளின் தாக்குதலுக்கு இலக்காகி பல்லை இழந்துள்ளார். மகள் கிருசாந்தி 2011ம் ஆண்டு காதலித்து திருமணம் முடித்து காதலனுடன் லண்டன் சென்றுள்ளார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வரவேயில்லை. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவில் கணவனை இழந்த தாய், தனது மகள் கிருசாந்தி மற்றும் மூத்த மகனை கடும் கஸ்டத்தின் மத்தியில் வளர்த்துள்ளார். கிருசாந்தி ஏ.எல் படித்துக் கொண்டிருக்கும் போதே தாய்க்கு தெரியாது காதலித்து ஒருவனுடன் ஓடியுள்ளார். கிருசாந்தி திருமணம் முடித்து சென்ற பின் சாவகச்சேரியில் மகனுடனேயே தனித்து வாழ்ந்து வந்துள்ளார். மகனும் பொறியியல் படிப்பை முடித்து சிங்கப்பூரில் வேலை செய்து வந்ததாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் 2020ம் ஆண்டு வரை தாயுடன் தொடர்பே இல்லாதிருந்த கிருசாந்தி தாய்க்கு கொரோனா வந்துவிட்டது என அறிந்து ஒருதடவை தாயிடம் கதைத்துள்ளார். அதன் பின்னர் பல தடவைகள் தாயுடன் கதைத்த போதும் தாயார் தனது மகளுடன் சரியான முறையில் கதைக்கவில்லை என தெரியவருகின்றது.

கிருசாந்தியின் பெற்றோர் வன்னியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த போது கிளிநொச்சி நகர்ப் பகுதியில் 15 பரப்பு காணியை வாங்கி தற்காலிகமாக வீடு அமைத்து தங்கியிருந்ததாகத் தெரியவருகின்றது. தற்போது அந்தக் காணி பல கோடி மதிப்பில் கிளிநொச்சியில் இருக்கின்றது. அத்துடன் சாவகச்சேரியில் ஏ9 வீதியோரமாக உள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள 8 பரப்பு காணியுடன் கூடிய வீடும் தாயின் பெயரிலேயே இருந்துள்ளது. 2021ம் ஆண்டு சிங்கப்பூரில் பணியாற்றும் பொறியியலாளரான மகனுக்கும் யாழ்ப்பாணத்தில் திருமணம் நடந்துள்ளது. குறித்த திருமணத்திற்கு அழையா விருந்தாளியாக லண்டனிலிருந்து தனது பிள்ளைகள் இருவருடன் மகள் வந்துள்ளார். திருமணம் முடிந்து அடுத்தநாளே தனக்கு சாவகச்சேரி வீடு மற்றும் கிளிநொச்சி காணிகளை எழுதித் தருமாறு மகள் கோரியுள்ளார். ஆனால் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்து தற்போது யாருக்கும் காணி எழுதிக் கொடுக்க மாட்டேன் என கூறி கிருசாந்தியை அனுப்பியதாக தெரியவருகின்றது. மகனும் மருமகளும் சிங்கப்பூரில் வசித்து வந்த போது தாய் தனது சகோதரி மற்றும் சகோதரி பிள்ளைகளுடன் தனது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன் சகல சொத்துக்களையும் மகனின் பெயரிலேயே தாய் எழுதி வைத்துள்ளார். இதனை கேள்விப்பட்ட மகள் கடந்த சில நாட்களுக்கு முன் லண்டனிலிருந்து வந்து தாயுடன் கடும் சண்டையிட்டதாகத் தெரியவருகின்றது.கிருசாந்தியும் கிருசாந்தியின் கணவனின் சகோதரி மற்றும் சகோதரியின் பிள்ளைகளும் சாவகச்சேரிக்கு வந்து தாயுடன் சண்டையிட்டுள்ளனர். தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தாய்க்கு முகத்தில் ஹெல்மட்டால் கிருசாந்தி அடித்ததில் பற்கள் உடைந்து இரத்தம் பீறிட்டுள்ளது. இதனைப் பார்த்த பின் கிருசாந்தி தன்னுடன் வந்த கணவனின் சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் தாயை உறவுகள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தாய் பொலிசாரிடம் முறையிட மறுத்து வருவதாகத் தெரியவருகின்றது. தாய் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து சிங்கப்பூரிலிருந்து வந்த மகன் தற்போது பொலிசாரிடம் முறையிட நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இதே வேளை கிருசாந்தியின் கணவன் கிருசாந்தியின் சமூகத்தை விட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தாய் சொத்து எழுதி வைக்க விரும்பவில்லை என கிருசாந்தி மற்றும் அவரது கணவரின் குடும்பத்தினர் அப்பகுதியில் நின்று அனுதாப அலையை தோற்றுவிக்க முயன்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job