நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, May 24, 2024

வவுனியாவில் 25 வயது பெண்ணுடன் காதலன் உறவில் இருந்த வீடியோக்களை 43 வயது கனடா மாப்பிளைக்கு அனுப்பியது யார்?


இன்னும் சில நாட்களில் திருமணமாக இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கி நிற்கும் கனடா மாப்பிளை ஒருவருக்கு அவரது எதிர்கால மனைவியுடன் அந்த ரங்கமாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டு பின்னர் அது கனடா மாப்பிளையின் வேண்டுகோளுக்கு இணங்க வாபஸ் பெறப்பட்டுள்ளது. மணப்பெண்ணும் குறித்த காதலனும் பாடசாலைக் காலத்தில் காதலித்து வந்துள்ளார்கள். அதன் பின்னர் காதலன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து, குறித்த பெண் அவனை விட்டு பிரிந்துள்ளார். இதனால் பல தடவைகள் பெண்ணின் வீ்ட்டுக்கு காதலன் சென்று வன்முறையில் ஈடுபட்டு ஒரு தடவை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

அதன் பின்னர் கடந்த வருடமும் வெளிநாட்டு திருமணம் ஒன்று குறித்த பெண்ணுக்கு நிச்சயமாகிய நிலையில் இனந்தெரியாதவர்களால் பெண்ணும் காதலனும் உறவு கொள்ளும்  வீடியோ அனுப்பப்பட்டு கலியாணம் குழப்பட்டுள்ளது. பின்னர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்ற 43 வயதான விவாகரத்தான மாப்பிளை ஒருவருக்கு குறித்த பெண் நிச்சயம் செய்யபட்டிருந்தார். இந் நிலையில் அடுத்தவாரம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் மாப்பிளையின் வட்சப் இலக்கத்திற்கு இனந்தெரியாத இலக்கத்தில் இருந்து மணமகளுடன் அந்த ரங்கமாக ஒருவன் உறவு கொள்ளும் வீடியோக்கள் அனுப்பப்பட்டிருந்தது. ஏற்கனவே குறித்த பெண்ணின் காதல் தொடர்பாக கனடா மாப்பிளைக்கு தெரியப்படுத்தியிருந்துள்ளார்கள். அதனால் குறித்த அந்த ரங்க வீடியோ வந்தது தொடர்பாக மணமகளுக்கு மாப்பிளை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து மணமகளின் உறவுகள் பொலிசாரிடம் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.

இருப்பினும் பொலிசாரின் முறைப்பாட்டை மாப்பிளையின் வேண்டுகோளுக்கு இணங்க வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் காதலனின் வீடு தேடிச் சென்ற கனடா மாப்பிளை குறித்த வீடியோ தொடர்பாக அவனிடம் விளக்கம் கோரிய போது, குறித்த வீடியோக்கள் தன்னால் அனுப்பப்படவில்லை என காதலன் கூறியுள்ளான். அத்துடன் காதலியுடன் இருந்த கோபம் காரணமாகவும் தான் சிறைக்கு சென்ற விரக்தி காரணமாகவும் தன்னுடன் காதலி அந்த ரங்கமாக இருந்த காட்சிகளை சமூகவலைத்தளத்தில் 2019ம் ஆண்டு வெளியிட்டு அந்த சமூகவலைத்தளம் பின்னர் முடக்கப்பட்டதாகவும் காதலன் கனடா மாப்பிளைக்கு கூறியுள்ளார். அதே நேரம் காதலன் தற்போது திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் உள்ளதை கனடா மாப்பிளை அவதானித்துள்ளார்.

கனடா மாப்பிளைக்கு அனுப்பபட்ட வட்சப் இலக்கம் அனுராதபுரத்தைச் சேர்ந்த இறந்து போன சிங்கள வயோதிபர் ஒருவரின் பதிவில் உள்ளதாகத் தெரியவருகின்றது. கனடா மாப்பிளையின் தொலைபேசி இலக்கம் மணப்பெண்ணான யுவதியின் நெருங்கிய உறவுகளுக்கே தெரிந்த நிலையில் குறித்த வீடியோ தனக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் யுவதியின் நெருங்கிய உறவு யாராவது தொடர்புபட்டிருக்கலாம் என மாப்பிளை சந்தேகப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job