நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, May 20, 2024

முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி | Traveling In The Plowing Machine One Person Died


முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 7:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் உழவு இயந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தபோது வேகமாகச் சென்ற உழவியந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்பம் முற்பட்டபோது பெட்டி கழன்று புரண்டுள்ளது.

இந்த விபத்தில் உழவனூர் பகுதியில் சேர்ந்த 16 வயதுடைய ர.மிதுசிகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் புதுக் குடியிருப்பு ஆதார வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்த இளைஞனின் உடலும் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு வீதி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளார்கள்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job