நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 19, 2018

நிதி நிறுவனத்தில் கத்தியை காட்டி 18 இலட்சம் கொள்ளை: யாழில் இன்று காலை பரபரப்பு!




சாவகச்சேரியில் இன்று காலை நிதி நிறுவனம் ஒன்றில் கத்தியை காட்டி பதினெட்டு இலட்சம் ரூபா
   
       
   
  கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று காலை வழக்கம் போல நிதி நிறுவன பெண் பணியாளர் அலுவலகத்தை திறந்து, கடமையில் இருந்த போது, முகத்தை மூடியபடி தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம மனிதன் கத்தி முனையில் பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.


அலுவலகத்தை திறந்து வழக்கம் போல பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது, முகத்தை மூடி தலைக்கவசமணிந்த ஒருவர் வந்து, கத்தியை நீட்டி அச்சுறுத்தி, பணத்தை மேசையில் வைக்குமாறு கட்டளையிட்டார்.
   
       
   
  அவர் சொன்னபடியே மேசையில் பணத்தை வைத்தேன். அவர் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்’ என பெண் பணியாளர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தின் சிசிரிவி காணொளி பதிவுகள் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திலேயே உள்ளதால், உடனடியாக சிசிரிவி பதிவை பெற முடியவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் தொடர்ந்தபடியுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job