50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, May 4, 2024

மனைவி கொலை: சிசிரிவி காட்சியால் முன்னாள் அமைச்சர் சிக்கலில்!


கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ், மனைவியை கொன்ற வழக்கில் 20 வருட சிறை தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் நாட்டில், 6 பெண்களில் ஒருவர், துணைவரால் வன்முறையை எதிர்கொள்கிறார் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவர், அவருடைய மனைவியை படுகொலை செய்த விவகாரம் அந்நாடு முழுவதும் புயலை கிளப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சட்டங்களை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ் (43) என்பவர் அவருடைய மனைவி சால்டனட் நியூக்நோவா (31) என்பவரை படுகொலை செய்த குற்றத்திற்காக வழக்கை எதிர்கொண்டுள்ளார். நியூக்நோவா, 4 குழந்தைகளுக்கு தந்தையான குவாண்டிக்கின் 3வது மனைவி ஆவார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில், அல்மேட்டி பகுதியில் உள்ள அவருடைய சொந்த உணவு விடுதியில் வைத்து, மனைவியை 8 மணிநேரம் கடுமையாக தாக்கியுள்ளார். தலைமுடியை பிடித்து இழுத்து சென்று, தொடர்ந்து அடித்தும், குத்தியும், தாக்கியிருக்கிறார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கமராவில் பதிவாகி உள்ளன.

முந்தின நாள் இரவு முழுவதும் மற்றும் சம்பவம் நடந்த அன்றும் இரண்டு பேரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதுபற்றி போலீசாருக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நியூக்நோவா சுயநினைவு இழந்து போனார். 12 மணிநேரத்திற்கு பின்னரே ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடியோவில், அந்த பெண்ணை முன்னாள் மந்திரி குவாண்டிக், தரதரவென இழுத்து சென்று ஒரு மூலையில் தள்ளுகிறார். அதன்பின்னர், அடித்து உதைக்கிறார். தப்பி குளியலறைக்கு சென்ற அவரை, கதவை உடைத்து கொண்டு, உள்ளே சென்று, வெளியே இழுத்து வந்து தாக்குகிறார்.

இதில், நியூக்நோவாவின் முகம், தலை, கைகள் மற்றும் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. குவாண்டிக் நீதிமன்றத்தில் சாட்சியமளக்கையில், நியூக்நோவா நிலத்தில் விழுந்து பின்னர் எழுந்து, விழுந்தபடியிருந்தார், அவரை கட்டுப்படுத்த முடியவில்லையென கூறியுள்ளார். ஒருமுறை விழுந்த போது, அவரது முகம் குப்புற விழுந்ததாகவும், பின்னர் எழுந்திருக்கவில்லையென்றும், அதுவரை அனைத்தையும் சற்று தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அவரை தன்னால் தூக்க முடியாததால் உதவ முயற்சிக்கவில்லையென்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, குவாண்டிக் தனது மனைவியை அடிக்கும் சிசிரிவி கமரா காட்சிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டன.

மனைவியை உள்ளங்கையினால் மட்டுமே அடித்ததாக குவாண்டிக் வாதிட்டுள்ளார்.

குவாண்டிக் பிஷிம்பாயேவ் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில்- “நடந்ததற்கு உண்மையில் என் தவறுதான். கைது செய்யப்பட்ட உடனேயே, நான் குற்றவாளி என்று சொன்னேன். ஆனால் திட்டமிட்ட கொலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த வீடியோக்களில் நான் இன்னும் சரியாக நடந்து கொண்டிருக்க வேண்டும். அதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். அங்கே என் நடத்தை அருவருப்பாகவும், தாழ்வாகவும் இருக்கிறது. எனக்கு போதுமான பொறுமை இல்லை, நான் அவளை காயப்படுத்த விரும்பினேன், ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவளைக் கொல்லவில்லை, ”என்றார்.

இந்த வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு 20 வருட சிறை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அந்நாட்டில் துணைவரை துன்புறுத்துவதற்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதாவில் ஜனாதிபதி காசிம்-ஜோமர்த் தொகாயெவ் கையெழுத்திட்டு உள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job