இலங்கையில் வசிக்கவும் தொழில் செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிட விசாவை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பெற முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய(Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த திட்டத்துக்கான விதிமுறைகள் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் விரைவில் திட்டம் செயற்படுத்தப்படுவதற்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்றதன் பின்னர் குடியுரிமை நிறுத்தப்பட்ட இலங்கையர்களின் இலங்கை அல்லாத மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகியோரும் வதிவிட விசாவிற்கு உரிமையுடையவர்களாக மாறுவர்.
அமெரிக்க டொலர்
இந்நிலையில் விண்ணப்பம் செய்யும் ஒருவர் விசாவிற்கு 1000 அமெரிக்க டொலர்களை செலுத்தும் அதே நேரத்தில் இலங்கை அல்லாத மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தலா 400 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும்.
Dual Citizenship For Sri Lankans Abroad
அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாத வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பல முறையீடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் தனது கொள்கைக்கு இணங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
விசா ரத்து
தற்போதைய தேவையின்படி முதல் வருடத்தில் 3,000 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 10,000 விண்ணப்பங்களை எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் குடியிருப்பு விசாக்கள் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு அதன் பிறகு புதுப்பிக்கப்படும்.
| Dual Citizenship For Sri Lankans Abroad
பெறுநர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும், பொதுச் சேவையில் சேரவும், வியாபாரத்தில் ஈடுபடவும் மற்றும் இலங்கையில் முதலீடு செய்யவும் முடியும்.
அத்துடன் விசாக்களை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகளும் அரசிதழில் வெளியிடப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment