Thursday, May 9, 2024

யாழில் சிக்கிய விபச் சார விடுதி; கைதான அழகிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்: பின்னணி யார் தெரியுமா?


யாழில் சிக்கிய விபச் சார விடுதி; கைதான அழகிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்: பின்னணி யார் தெரியுமா?

யழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வீடொன்றில் இயங்கிய விப ச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து, பலாலி வீதி, கந்தர்மடம், மணற்தரை வீதியில் இயங்கிய விப ச்சார விடுதியை முற்றுகையிட்டனர்.

பொலிசார் முற்றுகையிட்ட போது, அந்த வீட்டின் உரிமையாளர், இரண்டு விப ச்சார அழகிகள், ஒரு வாடிக்கையாளர் ஆகியோர் அந்த வீட்டில் இருந்தனர். மற்றொருவர் மதில் பாய்ந்து ஓடிவிட்டார். அவர் தப்பியோடும் போது தொலைபேசி கீழே விழுந்து விட்டது. அதை பொலிசார் மீட்டனர். அவர் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

விப ச்சார அழகிகள் நீர்வேலி, பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த 23, 28 வயதானவர்கள். அவர்களிடம் வந்த வாடிக்கையாளர் கோப்பாயை சேர்ந்த 24 வயதான இளைஞன்.

அண்மையில் யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் விப ச்சார விடுதியொன்று சிக்கியது. அது சிக்கியதை தொடர்ந்து, அந்த விடுதியை நடத்திய திலீபன் என்பவர் இந்த விடுதியுடன் தொடர்புபட்டு செயற்பட்டதாக கைதான பெண்ணொருவர் தெரிவித்தார். திலீபனே வெள்ளை நிற முச்சக்கர வண்டியில் தன்னை இந்த விடுதியில் கொண்டு வந்து இறக்கி விட்டதாகவும், அவரே வாடிக்கையாளர்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, யாழ் நகரில் லோன்றி நடத்தும் ஒருவரும் இந்த விப ச்சார வலையமைப்பில் உள்ளார். சுண்டுக்குளி விப ச்சார விடுதிக்கும் அவர் வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்து வந்துள்ளார். தற்போது சிக்கிய விடுதியில் கைதான பெண்ணொருவரிற்கான வாடிக்கையாளரை அந்த லோன்றி நடத்துபவரே அனுப்பி வைத்து வருகிறார்.

இரண்டு பெண்களிடமும் பாலி யல் சேவை பெறுவதற்காக நபர் ஒருவரிடம் ரூ.7,000 முகவர்களால் வாங்கப்படுகிறது. இதில் ரூ.2,000 இந்த பெண்களிடம் வழங்கப்படுகிறது. தினமும் தலா 6,7 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பாலி யல் சேவை வழங்குவதாக கைதான இரண்டு யுவதிகளும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் சில அழகு நிலையங்கள் ஊடாகவும் இந்த முகவர்கள் விப ச்சார அழகிகளை பெற்று வருவதாகவும், சில சிங்கள விப ச்சார அழகிகளையும் நகரில் தங்க வைத்து விப ச்சாரம் நடத்தி வருவதாகவும் கைதான பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாளை அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job